Social Icons

Pages

Saturday, July 11, 2009

முட்டை மூளை வதக்கல்



தேவையான‌ பொருட்க‌ள்



ஆட்டு மூளை = இரண்டு
முட்டை = இரண்டு
வெங்காயம் = நான்கு
தக்காளி ‍= ஒன்று பொரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசை கரண்டி
ரெட் க‌லர் ப‌ச்ச‌மிள‌காய் = முன்று
மிள‌காய் தூள் = ஒரு தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
உப்பு = ஒரு தேக்க‌ர‌ண்டி (ருசிக்கு)
ப‌ட்டை = ஒரு சிறிய‌ துண்டு
க‌ர‌ம் ம‌சாலா தூள் = கால் தேக்க‌ர‌ண்டி
எண்ணை ‍= ஆறு தேக்க‌ர‌ண்டி
கொத்து ம‌ல்லி த‌ழை = கால் கை பிடி

செய்முறை

1.சூடான‌ வெண்ணீரில் சிறிது வினிகர் ஊற்றி மூளையை போட்டு மேலே உள்ள‌ மெல்லிய‌ தோலை மூளை உடையாம‌ல் பிரித்து எடுத்து ந‌ன்கு க‌ழுவி எடுத்து த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.

2.முட்டையை ந‌ன்கு நுரை பொங்க‌ அடித்து வைக்க‌வும்.

3. மூளையில் கால் தேக்க‌ர‌ண்டி,உப்பு கால் தேக்க‌ர‌ண்டி, சிறிது மிள‌காய் தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

4.ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியில் எண்ணை முன்று தேக்க‌ர‌ண்டி அள‌விற்கு ஊற்றி காய‌வைத்து ப‌ட்டையை போட்டு வெடிக்க‌விட்டு வெங்காய‌த்தை பொடியாக‌ அரிந்து சேர்க்க‌வும்.

5.வெங்காய‌ம் வெந்த‌தும் மீதி உள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ந‌ன்கு வாடை போக‌ வ‌த‌க்கி சிறிது கொத்தும‌ல்லி த‌ழை சேர்த்து த‌க்காளியை பொடியாக‌ அரிந்து சேர்த்து , மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு தூளும் சேர்த்து கிள‌றி சிறிது நேர‌ம் மூடி போட்டு வேக‌ விட‌வும்.

6. இப்போது மூளையை போட்டு லேசாக‌ பிர‌ட்டி முடி போட்டு ஒரு ப‌க்க‌ம் வேக‌ விட‌வும்,இதே போல் ம‌றுப‌க்க‌ம் தோசை பிர‌ட்டுவ‌து போல் பிர‌ட்டி வேக‌விட‌வும்.

7. க‌டைசியாக‌ முட்டையை ஊற்றி மீதி உள்ள் எண்ணையையும் சேர்த்து மூடி போட்டு வேக‌விட்டு, ம‌ற்ப‌க‌க்மும் பிர‌ட்டு வேக‌ விட்டு துண்டுக‌ளாக‌ வெட்டி விட‌வும். வெட்டி விட்டு ந‌ன்கு கிள‌றி ப‌ச்ச‌மிள‌காய், கொத்துமல்லி த‌ழை தூவி மீண்டும் ஒரு முறை பிர‌ட்டிவிட்டு இர‌க்க‌வும்.

8. சுவையான‌ முட்டை மூளை வ‌த‌க்க‌ல் ரெடி.ஆட்டு பாட்ஸில் மூளையை ப‌ல‌ வித‌மாக‌ செய்ய‌லாம், அப்படியே முழுசாக வ‌றுத்தும் எடுக்க‌லாம்.

இதை ஐந்து பேர் சாப்பிடலாம்.

Wednesday, July 8, 2009

கோதுமை பூரியும் பாஜியும்






கோதுமை பூரி

தே.பொருட்கள்
கோதுமை மாவு = கால் கிலோ
பட்டு போல் உள்ள ரவை = 25 கிராம்
சர்க்கரை = ஒரு தேக்கரண்டி
உப்பு = ஒரு தேக்கரண்டி
தண்ணீர் = ஒரு டம்ளர்
எண்ணை = இரண்டு தேக்கரண்டி

செய்முறை

  • கோதுமைமாவில் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் எண்ணை தவிர போட்டு குழைக்கவும்.

  • குழைக்கும் போது இடையில் ஒரு தேக்கரண்டி எண்ணையும், கடைசியில் ஒருதேக்கரண்டி எண்ணையும் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

  • தண்ணீர் முதலில் முக்கால் டம்ளர் ஊற்றி குழைக்கவும், பிறகு தேவைக்கு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து குழைக்கவும்.
பாஜி

தேவையான பொருட்கள்

உருளை கிழங்கு = கால் கிலோ
வெங்காயம் = முன்று
த‌க்காளி = ஒன்று
மிள‌காய் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
உப்பு = முக்கால் தேக்க‌ர‌ண்டி
இஞ்சி = ஒரு தேக்க‌ர‌ண்டி (பொடியாக‌ அரிந்த‌து)
ப‌ச்ச‌ மிள‌காய் = முன்று (இர‌ண்டாக‌ ஒடித்து கொள்ள‌வும்)
கடுகு = அரை தேக்கரண்டி
முந்திரி = முன்று (பொடியாக‌ அரிந்து கொள்ள‌வும்)
உளுந்த‌ம் ப‌ருப்பு = அரை தேக்க‌ர‌ண்டி
கருவேப்பிலை = சிறிது
எண்ணை = நான்கு தேக்க‌ர‌ண்டி

செய்முறை

  • பூரிக்கு மாவு குழைக்கும் முன் உருளை கிழ‌ங்கை வேக‌ போட‌வும்.
  • உருளை கிழ‌ங்கை ந‌ன்கு ம‌ண் போக‌ க‌ழுவி இர‌ண்டாக‌ வெட்டி அதில் கால் தேக்க‌ர‌ண்டி உப்பு, கால் தேக்க‌ர‌ண்டி சேர்த்து மூழ்கும் அள‌விற்கு த‌ண்ணீர் ஊற்றி குக்க‌ரில் நான்கு ஐந்து விசில் விட்டு இர‌க்க‌வும்.ஆறியதும் தோலை உறித்து மசித்து வைக்கவும்.
  • ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியில் எண்ணையை காய‌வைத்து அதில் க‌டுகு,உளுத்த‌ம் ப‌ருப்பு, முந்திரி,க‌ருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காய‌ம் சேர்த்து வ‌த‌க்க‌வும்.
  • வெங்காய‌ம் வ‌த‌ங்கிய‌தும் த‌க்காளியை ஆறாக‌ அரிந்து சேர்த்து ப‌ச்ச‌மிள‌காய், இஞ்சியை சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்க‌வும்.

  • பிற‌கு மிள‌காய் தூள்,கால் தேக்க‌ர‌ண்டி ம‌ஞ்ச‌ள் தூள் , உப்பு அரை தேக்க‌ர‌ண்டி சேர்த்து இர‌ண்டு நிமிட‌ம் வ‌த‌ங்க‌ விட‌வும்.
  • ம‌சித்த‌ உருளையை சேர்த்து கிள‌றி கால் ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து முடி போட்டு சிறிது நேர‌ம் சிறு தீயில் விட‌வும்.க‌டைசியாக‌ கொத்து ம‌ல்லி த‌ழை தூவி இர‌க்க‌வும்.
    குறிப்பு:

பூரி பாஜி என்ப‌து ரொம்ப‌சுல‌ப‌ம் தான் பல‌ வ‌கைக‌ளில் செய்ய‌லாம்.மைதாவில் செய்தால் உட‌னே சுட‌ சுட‌ சாப்பிட‌னும்.இது கோதுமையில் செய்வ‌தால் ப‌ள்ளிக்கோ ஆபிஸுக்கோ க‌ட்டி கண்டு போக‌லாம்.பூரியை எண்ணை ந‌ன்கு காய்ந்த‌தும் தீயின் அள‌வை மீடிய‌மாக‌ வைத்து சுட‌வும்.ஒரே சீராக‌ தேய்த்து போட‌னும். எண்ணையில் போட்ட‌தும் சும்மா சும்மா போட்டு கிண்ட‌க்கூடாது.ஒரு ப‌க்க‌ம் வெந்த‌தும் , உட‌னே ம‌றுப‌க்க‌ம் திருப்பி பொங்கி வ‌ரும் போது எடுத்து விட‌வேண்டும்.









குழந்தைகளுக்கு, ஆபிஸுக்கும் கட்டி கொடுக்கும் போது இப்படி ஓவ்வொரு பூரியிலும் பாஜியை தடவி மடக்கிவைத்தால் சாப்பிட ஈசியாக இருக்கும்.
(இந்த அயிட்டம் என் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பேவரிட் .முன்று பேரும் முன்று விதமா சாப்பிடுவர்கள். பெரியவர் பூரிக்கு பொட்டுகடலை துவையல், சின்னவர் பூரி சாம்பார் , எங்க அத்தானுக்கு பூரி பாஜி ரொம்பவே பேவரிட்) ஆபிஸ் கொண்டு போன பக்கத்து டேபுள் அரபிகளுக்கு கூட மூக்கை துளைத்து கேட்டு சாப்பிடுவார்கள்.)இந்த‌ பூரிக்கு மீன் குழ‌ம்பு, பீஃப் பிரை,ம‌ட்ட‌ன் குருமா, ம‌ட்ட‌ன் கூட்டு எல்லாம் ந‌ல்ல‌ இருக்கும்.





















Saturday, July 4, 2009

கிட்னி பிரை

கவனிக்க‌
என்னுடைய அனைத்து குறிப்புகளும் அருசுவைடாட்காமில் உள்ளது.சில ரெசிபிக்கள் மட்டும் இதில்
http://arusuvai.com/tamil/experts/3475 - jaleela

///இது ஆட்டு பாட்ஸில் இது கிட்னி பிரை ( ஈரல் என்பது வேறு) இது ஏற்கனவே பிரபல வெப் சைட்டில் வேறு ஒரு முறையில் கொடுத்துள்ளேன்.
சாப்பிட வாங்க‌
இந்த முறை சமையலறைடாட் காமில் மார்ச் மாதம் கொடுத்தேன், ஆனால் இந்த குறிப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது,
இது எல்லாருடைய வெப் சைட் மூக்கையும் துளைத்து விட்டது/
ஆளுக்காள் அவரவர் வெப் சைட்டில் காப்பி செய்து போட்டு இருக்கிறார்கள், பிரபல மாத இதழ் ஒன்றிலும் வெளியாகி உள்ளது.
அதில் என் பிளாக்கிலும் நான் போட்டு கொள்கிறேன். செய்து ருசிக்க்கவும் சூப்பரான குழந்தைகளின் ஸ்மால் சிக்கன்.)கிட்னி பிரை...


தேவையான பொருட்கள்


ஆட்டு கிட்னி - கால் கிலோ
உப்பு தூள் - அரை தேக்கரண்டி (தேவைக்கு)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முக்கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - சிறிது
புதினா - முன்று இதழ்
பச்ச மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பட்டை - சிறிய துண்டு (கால் இன்ச் அளவு)
கரம் மசாலா தூள் - ஒரு பின்ச்
தக்காளி ஒன்று - சிறியது

எண்ணை - இரண்டு தேக்கரண்டி
நெய் - கால் தேக்கரண்டி

செய்முறை

1. முதலில் கிட்னியை நடுவில் இருக்கும் கொழுப்பை மட்டும் அகற்றி விட்டு இரு முறை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.

2. பிறகு மறுபடி இருமுறை கழுவி தண்ணீரை வடிய விடவும்.
கிட்னியில் உப்பு , இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும், தக்காளியை நான்கு துண்டாக அரிந்து போடவும்.

3. கலக்கியதை ஐந்து நிமிடம் ஊறவைத்து குக்கரில் தண்ணீர் சேர்க்க வேண்டாம் முன்று விசி விட்டு இரக்கவும்.

4. இப்போது அதில் நிறைய தண்ணீர் நிற்கும் அதை வற்ற விடவும்.

5. தனியாக ஒரு வானலியில் ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி பட்டை,வெங்காயம் மீடியமாக அரிந்து சேர்த்து தாளித்து வற்றிய கிட்னியை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி பச்சமிளகாய் பொடியாக அரிந்து சேர்த்து கொத்துமல்லி, புதினா, நெய்,சேர்த்து கரம் மசாலா, தூவி கிளறி இரக்கவும்.

6. சுவையான கிட்னி பிரை ரெடி

குறிப்பு

இதை சரியாக கழுவ வில்லை என்றால் செய்யும் போது ஸ்மெல் வரும், ரொம்ப நேரம் வேக விட்டால் ரொம்ப கல்லு மாதிரி ஆகிடும்.
இதை குக்காரில் வேக வைத்து செய்வதால் குழந்தைகளுக்கு கடித்து சாப்பிட ஈசியாக இருக்கும்.
குழந்தைகளுக்கு இதை ஸ்மால் சிக்கன் என்று சொல்லி கொடுங்கள்.
காஷ்மீரி சில்லி பொடி என்பது நல்ல கலராக இருக்கும் காரம் அவ்வள்வாக இருக்காது.
அது கிடைக்க வில்லை என்றால் சாத மிளகாய் தூளே போதுமானது.
இதே போல் மிளகு சேர்த்தும் செய்யலாம்.
குழந்தைகளுக்கு,பிள்ளை பெற்றவர்களுக்கு நெயிலேயே கூட செய்து கொடுக்கலாம்,

Wednesday, July 1, 2009

இடியாப்பம் வதக்கல்






  • இடியாப்ப‌ம் எண்ணை இல்லாத‌ அயிட்ட‌ம் அதை நாம் ப‌ல‌வ‌கையாக‌ ந‌ம் விருப்ப‌த்திற்கு ஏற்ற‌வாறு செய்ய்ய‌லாம்.

    இது பார்க்க வெள்ளையாக இருக்கும் பச்சமிளகாய், வெங்காயம், மிளகு சேர்த்து செய்வது.
  • இது நம் விருப்பத்திற்கு ஏற்ப தேங்காய் பால் ஊற்றியோ, பீர்ணி தொட்டோ சாப்பிடலாம்.
  • முட்டை இடியாப்பம் வதக்கல் (இரண்டு முறையில் செய்யலாம், வெள்ளையாகபச்சமிளகாய் சேர்த்து , அல்லது மிளகாய் தூள் சேர்த்து)கீமா சேர்த்து வ‌த‌க்குவது, காய்க‌றிக‌ள் சேர்த்து வ‌த‌க்குவ‌து, இடியாப்ப‌ பிரியாணி

    தே.பொருட்க‌ள்



    இடியாப்பம் = நான்கு
    முட்டை = முன்று
    மிளகு = அரை தேக்கரண்டி
    பச்ச மிளகாய் = முன்று
    வெங்காயம் = முன்று
    உப்பு = தேவைக்கு
    சர்க்கரை = அரை தேக்கரண்டி
    நெய் = அரை தேக்கரண்டி
    எண்ணை முன்று = தேக்கரண்டி
    ப‌ட்டை = சிறிய‌ துண்டு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் = கால் தேக்கரண்டி
    கொத்து மல்லி தழை = சிறிது (கடைசியில் மேலே தூவ)

    செய்முறை

    1 இடியாப்பத்தில் லேசாக பால் (அ) தண்ணீர் தெளித்து உதிர்த்து கொள்ளவும்.
    வெங்காயம் பச்ச மிளகாயை பொடியாக நருக்கிக்கொள்ளவும்.
  1. முட்டையில் மிளகு தூள்,உப்பு தூள் கால் தேக்கரண்டி,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு அடித்து வைக்கவும்.
  2. வாயகன்ற வானலியை காயவைத்து, அதில் எண்ணையை ஊற்றி பட்டை சேர்த்து வெடிக்கவிடவும்.அடுத்து வெங்காய‌ம், ப‌ச்ச‌மிள‌காய் சேர்த்து வ‌த‌க்க‌வும்.ரொம்ப‌ சிவ‌ற‌ விட‌ கூடாது க‌ண்ணாடி போல் இருக்கும் போதே க‌ல‌க்கி வைத்துள்ள் முட்டையை ப‌ர‌வ‌லாக‌ வைத்து அடுப்பின் தீயின் அள‌வை ந‌ன்கு குறைத்து வைத்து வேக‌விட‌வும்.
  3. ஒரு ப‌க்க‌ம் வெந்த‌தும் தோசை பிர‌ட்டுவ‌து போல் பிர‌ட்டி ம‌றுப‌க்க‌த்தையும் வேக‌ விட‌வும்.உதிர்த்து வைத்துள்ள‌ இடியாப்ப‌த்தை சேர்த்து கிள‌ற‌வும்.
  4. முட்டை ரொம்ப‌ தூளாகாம‌ல் மெதுவாக‌ கிள‌ற‌வும்.க‌டைசியாக‌ நெய் ச‌ர்க்க‌ரை தூவி இர‌க்க‌வும்.

கொத்துமல்லி தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு


கார‌ம் அதிக‌ம் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் ப‌ச்ச‌மிளகாயின் அள‌வை குறைத்து கொள்ள‌வும்.அல்ல‌து ப‌ச்ச‌மிள‌காயில் உள்ளே இருக்கும் விதைக‌ளை நீக்கி விட்டு அரிந்து சேர்க்க‌வும்.
இது பூப்பெய்திய‌ பெண்க‌ளுக்கு, பிள்ளை பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு அடிக்க‌டி செய்து கொடுக்க‌லாம். இடுப்புவ‌லி உள்ள‌வ‌ர்க‌ள் சுட‌ சுட‌ இடியாப்ப‌த்தில் தேங்காய் பால் சேர்த்து (தேவைபட்டால் சர்க்கரையும்) சாப்பிட்டால் வ‌லி குண‌மாகும்.
வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கும் ரொம்ப‌ பிடிக்கும்
.

 

Sample text

Sample Text

Sample Text